கவிதைகள்
Friday, April 27, 2007
ஈழத்தாய்
ஈழத்தாய்

"இன்று நம் அப்பாவின்
இதயத்தை குண்டு துளைத்ததிற்கு
பதிலடி கொடுத்துவிட்டேனம்மா!!"
போரில் தெறித்த விரலின்
வலியை பொருட்படுத்தாமல்
கூறும் மகளை உச்சி முகர்ந்தாள்..
தாலியற்ற வெறும் கழுத்தை தடவும்
அந்த ஈழத்தாயின் மனதில் ஆயிரம் கேள்விகள்??
அதன் கரு ஒன்றே..
"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்??"
நட்புடன்,
கமல்
அளித்தவர் மறுமலர்ச்சி சேர்க்கப்பட்ட நேரம்: 9:37 PM
0 தங்கள் கருத்துக்கள்:
Post a Comment
<< தொடக்கம்